தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி அரசு பள்ளிகளில் 91.02 % பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீத பேரும், தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதம் பேரும், இருபாலர் பள்ளிகளில் 94.7 சதவீதம் பேரும், பெண்கள் பள்ளிகளில் 96.39 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வில் பள்ளி மாணவர்கள் 13 ஆயிரத்து 371 பேரும், மாணவிகள் 16,244 பேர் இன மொத்தம் 29 ஆயிரத்து 615 பேர் தேர்வு எழுதினர். அதில் பள்ளி மாணவர்கள் 12,491 பேரும் பள்ளி மாணவிகள் 15 863 பேர் என மொத்தம் 28,354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதன்படி பள்ளி மாணவர்கள் 93.42 சதவீதமும் பள்ளி மாணவிகள் 97.65 சதவீதம் என மொத்தம் 95.74% திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *