திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று காலை திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார் . துணை மேயர் திவ்யா ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் பேசுகையில் தற்போது வரை திருச்சி மாவட்டத்தில் 23389 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்..
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்