திருச்சி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டில் முன்னிட்டு 3000 பயனாளிகளுக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கும் மாபெரும் விழா மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்..,நாங்கள் எப்படி துடிப்போடு செயல்படவேண்டும் என எடுத்துக்காட்டாக இருப்பவர் கே என் நேரு. ஒவ்வொரு தெருவிற்கும் சென்று நலத்திட்டங்களை அவரே செய்து வருகிறார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 3400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. நலத்திட்டங்கள் வழங்குவதில் தமிழகத்தில் திருச்சி தான் முதல் இடம். 33 மதத்தில் 3500 கோடி திட்டங்கள் கொண்டுவந்து உள்ளோம். மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் திட்டங்களை தட்டி பறித்து இங்கு கொண்டுவருபவர்தான் இங்கு அமர்ந்திருபவர் (அமைச்சர் கே என நேரு). என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்