தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  44 வது நாளான இன்று மண் உண்ணும் போராட்டத்தில்  விவசாயிகள் ஈடுபட்டனர்.

மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக:- 2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்  காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. கடந்த 43 நாட்களாக திருச்சியில் விவசாயிகள் பல்வேறு கட்ட காத்திருக்க போராட்டங்களை நடத்தினார். அப்போது அமைச்சர்கள் விவசாயி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர் மேலும் விவசாயிகளை தமிழக முதல்வரிடம் அழைத்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர் ஆனால் தற்போது விவசாயிகளை பார்த்தோம் பார்க்காதது போல் இங்கு உள்ள அமைச்சர்கள் சென்று வருகின்றனர் இது மிகுந்த வேதனை அளிக்கிறது.  கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. ஆகையால் விவசாயிகள் சாப்பிட உணவு இல்லாமல் மண் உண்ணும் நிலைமைக்கு தள்ளபட்டுள்ளார்கள் என தெரிவிக்கும் வகையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மத்திய , மாநில அரசு விவசாயிகளை அடிமைகளாக நடத்துக்கிறது என குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *