அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த 17-ம் தேதி மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்களும், பிற மாநிலக் கழகச் செயலாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று மதுரையில் கழக மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவது குறித்தும், அதிமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாகவும் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

அதன்படி திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் துணை மேயரும், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க புதிய உறுப்பினர் சேர்க்கை காண படிவத்தை அதிமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் எம்பி ரத்தினவேல் வழங்கினார். அருகில் முன்னாள் கொறாடா மனோகரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *