தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருவெறும்பூர் தொகுதியில் அமைந்துள்ள அம்பிகாபுரத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு பொங்கல் வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ளஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்,

அமைச்சருக்கு அப்பகுதியில் உள்ள ஐங்கரன் கலைக்கூடத்தை சேர்ந்த சிலம்ப மாணவ மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் மேலும் இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 ஆவது வார்டு நியாயவிலை கடையில் அமைச்சர் அப்பகுதியில் உள்ள 1365 குடும்ப அட்டைதாரர்களுக்கு  தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான இலவச வேட்டி சேலை, பச்சரிசி ,சர்க்கரை,கரும்பு ரூ1000 ரொக்கம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில்திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மண்டல தலைவர் மதிவாணன், பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் நீலமேகம்,36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயராமன் திருச்சி கிழக்கு தாசில்தார் குணசேகரன் கூட்டுறவு சார்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் சகிபுல்லா அமராவதி மேலாளர் கபிலன் மற்றும் அரசு அதிகாரிகள் , வட்ட செயலாளர்கள் ஆனந்த், சுரேஷ் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வினோத் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *