திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் சமயபுரத் தில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவியும், ரூபா (வயது13) என்ற மகளும், விஷ்வா (வயதுII) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிரபுவை காண வில்லை. இதைத்தொடர்ந்து பிரபுவின் சகோதரர் தனது அண்ணனை காணவில்லை என்றும், தனது அண்ணிக்கும் வேறு ஒரு நபருக்கும் பழக்கம் இருந்து வந்ததால் அவரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ் பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் வினோதினியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அங்கு அவர் இல்லை அவருடைய செல்போன் மட்டுமே வீட்டில் இருந்தது. இதைத்தொடர்ந்து செல்போனை கைப்பற்றிய போலீசார் வினோதினியை தேடி வந்தனர். இந்த நிலையில் வினோதினி இருக்கும் இடத்தை கண்டறிந்து, அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வினோதினிக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் பிரபு எரித்துக்கொலைசெய்யப்பட்டதும், அவரது உடல் சரியாக எரியாததால், உடலை கண்டம் துண்டமாக வெட்டி தலை நெஞ்சுப் பகுதிகளை காவிரிஆற்றிலும் கால் இடுப்பு பகுதிகளை கொள்ளிடம் ஆற்றிலும் வீசிச் சென்றுள்ளதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வினோதினியை கைது செய்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் சமயபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் பாரதி (வயது 23) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதை அறிந்த கணவன் பிரபு எச்சரித்து உள்ளார். இதனால் காதலன் பாரதி உடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும்,

கடந்த நவம்பர் 4 ந்தேதி மது போதையில் இருந்த பிரபுவை வினோதினி, பாரதி அவரது நண்பர்கள் சமயபுரம் ரூபன் பாபு (வயது 26) ஸ்ரீவான் (வயது 18) திவாகர் (வயது 18)ஆகியோர் சேர்ந்து தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொலை செய்தோம். பின்னர் பிரபு உடலை தீ வைத்து எரித்தோம் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வினோதினி மற்றும் அவரது கள்ளக்காதலன் பாரதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் பாரதிக்கு உடந்தையாக இருந்த ரூபன் பாபு சீனிவாசன் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் பிரபுவின் உடலை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உடலை போலீசார் இன்று தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *