திருச்சி மாவட்டம் பெரிய மிளகு பாறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ துலுக்காணந்தம்மன் ஸ்ரீ ஒண்டி கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளை அம்மாள், ஸ்ரீ பொம்மியம்மாள், ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காதலைத் தொடர்ந்து ஸ்ரீ துலுக்காணந்தம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், காய்கறி அலங்காரம், கனி அலங்காரம், வளையல் அலங்காரம், கதம்பம் அலங்காரம், மற்றும் மலர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்களில் அம்மன் ஒவ்வொரு நாளும் காட்சி அளித்து வந்தார்.

. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருச்சி காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து முட்டை கோழிகள் பால்குடம் தீர்க்க குடம் அக்னி சட்டி முளைப்பாரி அழகு கொத்து குழந்தை வரம் வேண்டி பல்லாக்கு எடுத்து பழைய கரூர் பைபாஸ் சாலை தென்னூர் சாலை கலெக்டர் ஆபீஸ் அலுவலக சாலை வழியாக மேல தாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். இந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ துலுக்காணந்தம்மன் ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர் மேலும் ஊர் நாட்டாமை மற்றும் வாரிசுதாரர்கள் ஊர் பொதுமக்கள் பக்த கோடிகள் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்