திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் அப்துல் ஜலீல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதந்த மாணவர்கள், பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நவீன் சேட் வரவேற்று கல்லூரி கடந்துவந்த பாதை, அதன் வளர்ச்சி மற்றும் சாதனைகளை தன்னுடைய பட்டமளிப்புவிழா அறிக்கையில் எடுத்துக் கூறினார்.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி 209 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடையே பட்டமளிப்புவிழா உரையாற்றினார்.
மேலும் இந்த வருடத்திற்கான நீதிபதி பக்கீர் முகமது சுழல் கோப்பையானது பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த மேலாண்மைத்துறைக்கு வழங்கப்பட்டது. கட்டிடவியல் துறை உதவிப் பேராசிரியர். சந்தோஷ்குமார் சிறப்புவிருந்தினர் அவர்களை அறிமுகப்படுத்தினார் நிறைவாக மேலாண்மைத்துறை துறைத்தலைவர் முனைவர் ஆண்டனி பிரகாஷ் நன்றி உரையாற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளரான அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையின் துறைத்தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.