திருச்சியில் இருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு மலின்டோ விமானம் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த ஒரு பயணியின் உடைமையில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் வெளிநாட்டு கரன்சிகளை அவர் மலேசியாவிற்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூபாய் 9.82 லட்சம் மதிப்பிலான மலேசியா ரிங்கிட் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்