சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் தினமும் வந்து சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

 அப்போது சிவகங்கை சேர்ந்த வெங்கடேஷ் 37 என்ற பயணி தனது உடலில் மறைத்து ரூபாய் 9.74 லட்சம் மதிப்பிலான 123 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *