சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து ரூபாய் 37.97 லட்சம் மதிப்பிலான 623.000 கிராம் நகைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கதுறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதேபோல் ஷார்ஜாவிலிருந்து இன்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடலில் மறைத்து ரூபாய் 18.79 லட்சம் மதிப்பிலான 306.5 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்ததை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *