தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர் திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைகிறார்.

நாளை நடைபெறும் நிகழ்ச்சி கலந்து கொண்ட பின்னர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதனையொட்டி திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கட்சியினர் திரளாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே நடந்து சென்று தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றுச் கொண்டு காரில் ஏறி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்