திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. இதில் அதிக அளவில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்திவரப்படுவது வாடிக்கை.இந்த நிலையில் இன்று துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணியின் இருக்கையின் கீழ் கருப்பு நாடாவால் சுற்றப்பட்ட பேக்கேஜ் ஒன்று கிடந்தது.

இதனை கண்டறிந்த விமான ஊழியர்கள், அதனை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதனை திறந்து பார்த்தபோது அதில் 24 கேரட் மதிப்பிலான ஆறு தங்க கட்டிகள் இருந்ததை கைப்பற்றினர். இந்த தங்க கட்டிகளின் மொத்த எடை 700.400 கிராம் எனவும், அதன் இந்திய மதிப்பு ரூபாய் 47 லட்சத்து 52 ஆயிரம் என கண்டறியப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த விமான பயணி யார்? என்பது குறித்து திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்