தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கல்லூரி, பட்டதாரி ஆசிரியர் இயக்கம், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி தினமான இன்று கருப்பு தினமாக அனுசரித்து தமிழகத்தில் சென்னை,திருச்சி, திருப்பத்தூர், தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று

கூறி அதன் பிறகு ஆட்சி அமைத்த உடன் சட்டமன்றத்தில் அரசாணை 20 பெயரில் அறிவிப்பு வெளியிட்டார்கள். பிறகு நான்கரை வருடங்கள் ஆன பிறகு அந்த அரசாணையை நிறைவேற்றாமல் தற்பொழுது அரசாணை 24 அறிவித்து மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். எனவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து அரசாணை 24 யை ரத்து செய்துவிட்டு அரசாணை 20 ஜ அமல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறோம் என்று தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்க மாநில செயலாளர் சந்தோஷ் குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *