திருச்சி மாநகர் கல்லுகுழி பகுதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது இந்த கோவிலில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று புனிதநீர் அடங்கிய கடங்கள் பட்டாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கிட மூலஸ்தானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுகளின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்