திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி அருணாச்சலா மன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு புதிய கோட்ட தலைவர்களுக்கு உத்தரவு நகல் மற்றும் பாராளுமன்ற தொகுதி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அன்னை சோனியா காந்தி – இளந்தலைவர் ராகுல் காந்தி -அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் ஆசியோடும், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர், மத்திய மாநில முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் .திருநாவுக்கரசர் அவர்களின் பரிந்துரைப்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் ஒப்புதலின்படி திருச்சி மாநகர் மாவட்ட வார்டு எண்கள் 22,23,27,28 உட்பட்ட தில்லைநகர் கோட்ட தலைவராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதற்கான நகலை பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு இன்று வழங்கினார்.

மேலும் கோட்டத்திற்குட்பட்ட, கோட்ட நிர்வாகிகள், வார்டு தலைவர்கள், வார்டு நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து கட்சிப்பணியினை தீவிரப்படுத்தவும், காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சிக்காக முழுமையான அர்ப்பணிப்போடும் அரவணைப்போடும் செயல்படவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *