திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு அருணாச்சல மன்றத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த முகாமில் நோக்கியோ டாட்டா பிர்லா ஒமேகா உட்பட 43 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் சுமார் 1500 ஆண், பெண் பட்டதாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அணி தலைவர்கள் கலைப்பிரிவு அருள் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், இந்திரா தோழி மாரீஸ்வரி,மனித உரிமை துறை எஸ்.ஆர். ஆறுமுகம்,மகளிர் காங்கிரஸ் அஞ்சு ,இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல்,மைதீன் கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல் , அழகர், மலர் வெங்கடேஷ் காந்தி ,கிருஷ்ணா,எட்வின் ராஜ், தருமேஷ்,மணிவேல் ஜெயம் கோபி,மணிவேல், பாக்கியராஜ், நிர்வாகிகள் ஜாகிர் உசேன், தாராநல்லூர் முரளி,கிளமெண்ட் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்