திருச்சி காவிரி பாலத்தில் நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர் அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் மீது ஏறி இறங்கியது இதில் படுகாயம் அடைந்த இரண்டு வாலிபர்களையும் அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் மற்றொருவர் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் இறந்த வாலிபர் உறையூர் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த கத்தபரிமாணம் (வயது 32) என்பது தெரிய வந்தது மேலும் இது குறித்து ஸ்ரீரங்கம் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *