திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின தொடக்க விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் சென்னை சுந்தரம் ஹோம் பைனான்ஸ் முதன்மை மனிதவள அதிகாரி கணபதி சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அதில் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் மனித வள கோட்பாடுகளையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு வேலை பெற தேவையான திறன்கள் பற்றியும் திறன்களை வளர்க்கும் வழிகள் குறித்தும் பல்வேறு நிகழ் கால எடுத்துக்காட்டுகள் மூலம் எடுத்துக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

விழாவில் முன்னதாக கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகுமார் வரவேற்புரை ஆற்றினார் கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி பிரதிவ்சந்த் வாழ்த்துரை வழங்கினார் விழாவில் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலக நண்பர்கள் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழாவின் இறுதியாக ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் ராபர்ட் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்