திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் குழும நிறுவனத்தின் 12வது பட்டமளிப்பு இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு இவ்விழாவிற்கு VDart குழுமத்தின் நிறுவனர் & CEO சித் அகமது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்று பட்டதாரிகளுக்கு பட்டதாரி சான்றிதழ்களை வழங்கினார். இதில் MBAல் 24, ME இன்ஜினியரிங் டிசைனில் 2, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 15, சிவில் இன்ஜினியரிங் 6. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 10, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் 16, கட்டிடக்கலை இளங்கலை 52 என 125 பேர் பட்டம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் VDart குழுமத்தின் நிறுவனர் & CEO சித் அகமது பேசுகையில்:- உங்கள் பயணத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் நீங்கள் சமாளித்த தடைகளை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு சோதனையும் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாக இருந்தது, மேலும் அவற்றைக் கடந்து செல்லும் உங்கள் திறன் உங்களை இந்த தருணத்திற்கு கொண்டு வந்துள்ளது. உங்கள் கல்வி உங்களுக்கு அறிவை வழங்குவது மட்டுமல்லாமல், இந்த கல்விச் சுவர்களுக்கு அப்பால் உலகின் சிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களையும் பண்புகளையும் உங்களுக்குள் புகுத்தியுள்ளது. இப்போது, நீங்கள் எதிர்காலத்தின் வாசலில் நிற்கும்போது, உங்கள் விதியை வடிவமைக்கும் சக்தியுடன் நீங்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறீர்கள்”.

விழாவில் கேர் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சென்ட்., கேர் பொறியியல் கல்லூரி முதல்வர் Dr.சாந்தி. Dr. பசும்பொன் பாண்டியன், கேர் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் மேடையில் இருந்தனர்.CARE குழும நிறுவனங்களின் பட்டதாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள். ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *