திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் கே கள்ளிக்குடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் முகம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கே கல்லுக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார் ‌

இந்த முகாமில் பொதுமக்கள் மனுக்கள் எழுதிக் கொடுப்பதற்கு அதற்கான ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் மேலும் எழுதப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காணொளி மூலம் பதிவேற்று செய்யப்பட்டு வருகிறது.இன்று துவங்கிய இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக ஊராட்சி மற்றும் ஊராட்சி துறை,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்கள் உள்ளிட்ட துறைகளுக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்