தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி எட்டியான வள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான முருகன்.இவர் திருமயத்தில் இருந்து லாரியில் தைல மரக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள டிஎன்பில் மில்லுக்கு சென்று கொண்டு இருந்தார். அதேபோல் முசிறி அருகே காட்டுப்புத்தூரிலிருந்து வாழை மரங்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் கோட்டூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரியில் ஏற்றப்பட்ட கட்டைகளின் பாரம் தாங்காமல் லாரியின் பின்பக்கம் வலது புறமுள்ள பாடி உடைந்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த வேன்மீது கட்டைகள் சரிந்து விழுந்ததில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் வந்த 6 நபர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டது.

 இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரக்கட்டைகள் சாலையை விழுந்ததால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மரகட்டைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்