திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தன்யா(25), தமிழ் (29) ஆகிய இரு திருநங்கைகள் இன்று விடியற்காலையில் திருச்சி பழை பால்பண்ணை அருகே இருசக்கர வாகனத்தில் தங்களின் வீட்டிற்கு வந்து கொண்டுயிருந்த பொழுது நிலைதடுமாறி சாலையில் விழுந்ததாகவும் அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரியில் சிக்கி ஒரு திருநங்கை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 மற்றொரு திருநங்கை உயிருக்கு போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . அப்போது வழியிலேயே அந்த திருநங்கையும் பரிதாபமாக இறந்துவிட்டார்,

விபத்தில் இறந்த இரு திருநங்கைகள் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த விபத்துக்கு குறித்து திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் திருநங்கைகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *