திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராகவும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவர் கடந்த 5 முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக தனது பணியை ஆற்றி வருகிறார்.

இந்நிலையில் திருச்சி எம் பி சிவா தனது 71-வது பிறந்த நாள் வெகு விமர்சையாக இன்று கொண்டாடினார் இந்த விழாவில் மருமகனும் வழக்கறிஞருமான கராத்தே முத்துக்குமார் தலைமையில் இளைஞர்கள் திருச்சி சிவா எம் பிக்கு ஆள் உயர மாலை மற்றும் சால்வை அணிவித்து பரிசு வழங்கி கேக் வெட்டி பிரம்மாண்டமாகக் கொண்டாடினார். இவ்விழாவில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *