திருச்சி ஜே கே சி அறக்கட்டளை ஐசிஎப் பேராயம், சர்வ சமய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் 34 ஆம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறந்த சேவைக்கான விருது வழங்கும் விழா திருச்சி ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றிட, ஜே கே சி நிறுவனர் மற்றும் தலைவர் பேராயர் டாக்டர் ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் பேராசிரியர் ரவி சேகர், பேராசிரியர் அருள் ஆடிட்டர் ரிச்சர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் சுப்பையா பாண்டியன் விஜிபி குழும உப தலைவர் தங்கையா ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் முனைவர் சையத் ஜாஹிர் அமிர்தம் சமூக நல அறக்கட்டளை தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சமூக சேவை செய்த சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அனைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது மேலும் கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்ற ஏழை எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *