விவசாயிகள் விளைவித்த விளைபொருள் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்துகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகள் மீது காவல்துறை வைத்து தண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல்களை நடத்தி விவசாயிகளை நசுக்கி ஒடுக்க நினைக்கும் மத்திய பாஜக மோடி அரசை கண்டித்து

 தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் சிவசாமி லால்குடி ஒன்றிய தலைவர் ராமலிங்கம் செந்துறை ஒன்றிய அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்