தமிழகம் முழுவதும் 10ஆயிரம் இடங்களில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ மூவர்ணக் கொடி பேரணி மாதம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 1500 இடங்களில் இந்த பேரணி நடத்தப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி திருச்சி மாவட்டம் துவாக்குடி நகர பாஜக சார்பாக துவாக்குடி நகர பாஜக துணை தலைவர் திருவாசகம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.இந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்ரேஷன் சிந்தூர் பற்றி விளக்கி பேசினார். மற்றும் இந்த நிகழ்வுக்கு முன்னால் துவாக்குடி மண்டல் தலைவர் பி.ராஜராஜன் பாலகிருஷ்ணன் தமிழ்செல்வன் ஆனந்த வள்ளி சரவணன் ஹரிகிருஷ்ணன் பழனி ஆகிய முக்கிய நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்