இந்த வருடத்தின் முதல் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் அன்பழகன் கூறும்போது : திருச்சி மாநகரட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் 21 மாநகராட்சியில் திருச்சி மாநகராட்சி சென்னைக்கு நிகரான மாநகராட்சியாக உருபெற்று உள்ளது. திருச்சி மாநகராட்சியுடன் 32 ஊராட்சிகள் இணைய உள்ளது இணைதால் பெரிய மாநகராட்சியாக உருவாகும் அதன் மூலம் தமிழக அரசு மூலமாக பல்வேறு திட்டங்கள் பெறப்படும். பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் இன்னும் ஒரு சில மாதங்களில் திறக்கப்படும் திறக்கபட்டால் திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்து குறையும்

2019 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டு 75 கிலோ மீட்டர் தான் முட்வடைந்தது நாங்கள் பொறுப்பேற்ற பிறகு 800 கிலோ மீட்டருக்கு மேல் முடிவடைந்து உள்ளது அதில் 450 கிலோ மீட்டர் சாலை போடப்பட்டுள்ளது இன்னும் 311 கிலோ மீட்டர்ருக்கு அரசு நிதி ஒதுக்க ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது இம்மாதத்தில் நிதி பெற்று புதிய சாலை போடப்படும் பஞ்சப்பூரில் 100 mld தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் 227 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் செய்யப்பட உள்ளது. தனியார் ஆம்னி பஸ் வந்து செல்ல 4 ஏக்கரில் 18.75 கோடியில் பேருந்து நிலையம் அமைய உள்ளது அதற்கு நிதி ஒதுக்கி ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது பஞ்சப்பூரில் இருந்து குடமுருட்டி வரை அல்லிதுறையில் இருந்து MGR சிலை வரை 10 கிலோ மீட்டர் சாலைகள் 350 கோடி ரூபாய் செலவில் போடப்பட உள்ளது பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை துறை அனுமதியுடன் சென்னை கத்திபார போல சுற்றுப்புற சாலை அமைவதற்கான திட்டம் இந்த ஆண்டில் துவங்கப்பட உள்ளது திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 14 ஏக்கர் IT பார்க் வருவதற்காக பேருந்து நிலையம் அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 30 ஏக்கரில் விளையாட்டு மைதானம் அமைய உள்ளது புதிய மார்கெட் 22 ஏக்கரில் 171 கொடியில் அமைய உள்ளது

கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சி மாநகராட்சி துய்மையான மாநகராட்சியாக முதல்வர் கையால் 50 லட்சம் பரிசு பெற்று உள்ளது அந்த தொகை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வரும் வட்டியில் மாநகராட்சி ஊழியர்கள் குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் கல்வி செலவு செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்ற பட்டு உள்ளது. ஏப்ரல், மே யில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் திருச்சியில் வீடு இடிந்து 4 பேர் இறந்து உள்ளனர் வீட்டில் மேற்கூரை மராத்தல் செய்யப்பட்டு உள்ளது அது பழுடடைந்து விழுந்து உள்ளது இதை பார்த்த பின்பு அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வீடாக சென்று கண்ணக்கெடுத்து அப்புறப்படுத்த சொல்லி உள்ளோம் திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதி இன்றி செயல்பட்டுவரும் தள்ளுவண்டி உணவகங்கள் அப்புறப்படுத்தபடும் வருகின்ற அக்டோபர் மாதம் மாநகராட்சி உடன் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும் தெப்பக்குளம் சுற்றி உள்ள கடைகளை அப்புறப்படுத்தி யானை குலத்தில் புதிய கடைகள் அமைத்து தர உள்ளோம் அதன் மூலம் தெப்பக்குளம் பகுதி தூய்மை பெரும் தொடர்ந்து திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் 8.5 கொடி செலவில் லேசர் லைட் கண்காட்சி தொடங்கப்படும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்