திருச்சி தெற்கு “மாவட்ட பிரதிநிதிகள்” சார்பாக டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி மேலச்சிந்தாமணி பகுதியில் உள்ள சிதம்பரம் மஹாலில் மாணவர் களிடையே வினாடி வினா போட்டிகள் தேதி சொல்லும் தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பின் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

முன்னதாக மாநகர கழக செயலாளர் மதிவாணன் வரவேற்புரையாற்றிட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை தலைமை நிலைய அலுவலக செயலாளர் துறைமுகம் காஜா வழங்கினார். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா தனக்கோடி, கவுன்சிலர்கள் திமுக மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்