மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அறிவிப்பின்படி திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணப்பாறை நகரில் உள்ள அஞ்சலகம் மற்றும் ஸ்டேட் பேங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் கோவிந்தராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ராஜலிங்கம் மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வா மணிகண்டம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசை கண்டித்து மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கணபதி மணப்பாறை வட்டார தலைவர்கள் சத்தியசீலன் சிவ சண்முகம் வையம்பட்டி வட்டார தலைவர்கள் செல்வம் ராதாகிருஷ்ணன் மருங்காபுரி வட்டார தலைவர்கள் குழந்தை தமிழரசன் மணிகண்டம் தலைவர் கருணாகரன் அந்தநல்லூர் வட்டாரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட நிர்வாகிகள் அர்ஜுன் வழக்கறிஞர் ஜான் போஸ்கோ ஆரோக்கியராஜ் மீனாட்சி சுந்தரம் ராமசாமி திருவெறும்பூர் பரணி மகளிர் காங்கிரஸ் சரோஜாதேவி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினேஷ் மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்