திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயில், முதல்வர் தே. சுவாமிராஜ் பன்னோக்கு வளாகம், நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட தேர்வு நெறியாளர் அலுவலகம், புதிய தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறை வளாகம், விளையாட்டுத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் புதிய கூடைப்பந்து மைதானம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி – தஞ்சாவூர் திருமண்டலத்தின் பேராயரும், கல்லூரிச் செயலரும், ஆட்சிமன்ற குழுத்தலைவருமான முனைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டமைப்பு வசதிகளை மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்