அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53- ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி நாளை அக்டோபர் 20ஆம் தேதி மாலை 6 மணி அளவில் திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் அதிமுக கழக 53 -ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் O.S.மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார் மேலும் கழக செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி, முன்னாள் அமைச்சர் பாலசுப் பிரமணியன், திருச்சி அதிமுக மாநகர் மாவட்டக் கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல்* Ex.MP ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். விழாவிற்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட மாநில நிர்வாகிகள் மகளிர் அணியினர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்