திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் எம் கே தியாகராஜ பாகவதர் ஆகியோர் மணிமண்டபங்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை நடத்தியது.

அதன் எதிரொலியாக தற்போது மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைவர்களின் மணிவண்டபங்களை சுற்றி நடைபாதை கற்கள் அமைக்கும் பணி மற்றும் சாலை அழகு படுத்துதல் பணி மற்றும் வளாகத்தை சுற்றி மண்டி கிடந்த முள் செடிகள் மற்றும் செடிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *