அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகராட்சியின் அலட்சியப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் வழங்கப்படும் சுகாதாரமற்ற குடிநீர். பல மாதங்களாகியும், எந்த வேலையும் நடைபெறாத மேரிஸ் தியேட்டர் மேம்பாலம். மக்களின் எதிர்ப்பையும் மீறி பசுமை பூங்காவில் வெட்டப்பட்டு வரும் மரங்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் உறையூர் மீன் மார்க்கெட்டில் வசூலிக்கப்படும் அநியாய நுழைவு கட்டணம். கிட்டத்தட்ட 20 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான். உட்பட, பல்வேறு வழிகளிலும் மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கும்,

செயல்படாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து, வருகிற திங்கள்கிழமை 28-ம் தேதி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி தலைமையில், கழகத்தின் தலைமை நிலைய செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *