திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான 2-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மாநகராட்சி மேயர் அன்பழகன் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.

இந்த கிரிக்கெட் போட்டியில் மாநகராட்சி அலுவலர்கள் அணி, மாநகராட்சி கோ அபிஷேகபுரம் அணி, மாநகராட்சி பொன்மலை அணி, மாநகராட்சி தொழில் நுட்ப அணி உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக சுழற்கோப்பையுடன் பத்தாயிரம் ரொக்கமும், 2-ம் பரிசாக சுழற்கோப்பையுடன் 7000/- ஆயிரம் ரொக்கமும், 3-ம் பரிசாக 5000/- ஆயிரம் ரொக்கமும் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.

இதில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், நகர் பொரு சிவபாதம் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணன், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, விஜயலெக்ஷ்மி கண்ணன், நகர செயலாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் இளநிலை பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *