திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி பெயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த மக்கள் குறைத்தற்கு நாள் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி சாக்கடை வசதி, குடிநீர் பிரச்சனை இட பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக மாநகர பொதுமக்கள் மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் இன்று வழங்கினர்.

 அருகில் ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன் , துர்காதேவி, ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்