திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தின் வெள்ளி விழா, பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் குறித்த முப்பெரும் விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அஜந்தாவில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் விஸ்வலிங்கம் வரவேற்புரையாற்றினார் தலைவர் சந்திரசேகரன் முப்பெரும் விழாவிற்கு தலைமை ஏற்றார் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை செயலாளர் சந்திரன் வாசிக்க சங்க நிதிநிலை அறிக்கை குறித்து பொருளாளர் திரு ஞானசம்பந்தம் பேசினார்.

இந்த முப்பெரும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து 80 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு தலைவர் துணைத் தலைவர் செயலாளர் துணைத் தலைவர் பொருளாளர் தணிக்கையாளர் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது இறுதியாக துணைச் செயலாளர் சேகர் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *