திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் லூர்துசாமி கூட்டரங்கில் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையார் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பித்ததும் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள சாலை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க கோரியும் அதேபோல் நாய், பன்றி, மாடுகள் ஆகியவற்றால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், துர்காதேவி ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்