மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (09-11-2023) அதே பகுதியில் நிலவுகிறது. மேலும் குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நேற்று மாலை இரவு நேரங்களில் கனமழை திருச்சி மாநகர் முழுவதும் கொட்டி தீர்த்தது குறிப்பாக டிவிஎஸ் டோல்கேட் தலைமை தபால் நிலையம் மத்திய பேருந்து நிலையம் காஜாமலை கே கே நகர் கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *