திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சல மன்றத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். இதில் தேசிய செயலாளர் கிரிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் பென்னட் அந்தோனிராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள், ஒருவர் பின் ஒருவராக, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த தேவையான யுக்திகளை வழங்கினர். ராகுல் காந்தி எம்பியின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வார்டுகள் தோறும் கொடியேற்றி, ஏழை மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து, ரத்த தானம் வழங்கி, மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கி, மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, துணை தலைவர் அபுதாஹிர், பொன்னன், பட்டேல், சரவணன், மாவட்ட பொது செயலாளர்கள் ஆடிட்டர் சுரேஷ், பூக்கடை பன்னீர்செல்வம், ராமலிங்கம், ஜான் பிரிட்டோ, உறந்தை செல்வம், ஹக்கீம், அன்பு ஆறுமுகம், பாலு, கருப்பையா, கதிரேசன், ஷேக் தாவுத், முஸ்தபா, செயற்குழு உறுப்பினர்கள் மாரீஸ்வரி, அஞ்சு, கோகிலா, கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், மணிவேல், வெங்கடேஷ் காந்தி, அழகர் , பாலசுந்தர், கோபி , தர்மேஷ், மலர் வெங்கடேசன், ஆர். ஜி முரளி, இஸ்மாயில், ராஜா டேனியல், கிருஷ்ணா மகளிர் அணி சீலா செலஸ், ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் லோகேஷ், விஜயகுமார், ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் பாண்டியன், ஊடக பிரிவு செந்தில், அமைப்பு சாரா தலைவர் மகேந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்