திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக எல்.ரெக்சை அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் நியமனம் செய்து அறிவித்தார். இதையடுத்து திருச்சி மாமன்ற உறுப்பினரான.ரெக்ஸ் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இன்று காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் வக்கில் கோவிந்தராஜன் முன்மொழிய அவர் பதவி ஏற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாவட்ட தலைவி சீலா தலைமையில் மகளிர் அணியினர் சால்வைப் அணிவித்து வரவேற்றனர். மேலும் கவுன்சிலர் சோபியா விமலாராணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கில் சந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஜீ.கே.முரளிதரன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார்,

கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ஷெலஸ் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்டதலைவர் ரெக்ஸ் தலைமையிலான நிர்வாகிகள் பெருந்தலைவர் காமராஜர், காந்தி, தியாகி அருணாச்சலம்ஆகிய தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்