அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மதுரையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், திருச்சி மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா,

மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் முத்துமாரி உள்ளிட்ட மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து,

மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். நாளை காலை 8.40 மணிக்கு தஞ்சை கும்பகோணம் ஆகிய பகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கார் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *