திருச்சிராப்பள்ளி மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் திருச்சி ஜே ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் இணைந்து நடத்திய ஆண்களுக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சனிக்கிழமை தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் திருச்சி ஜே ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியை ஜே ஜே பொறியியல் கல்லூரி முதல்வர் மதியழகன் திருச்சி மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் சேர்மன் செந்தில் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக செயலாளர் டாக்டர் நல்லுசாமி அண்ணாவி அனைவரையும் வரவேற்றார் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் நல்லிசாமி சேதுராமன் தலைமை தாங்கினார்.

போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன அதில் அடுத்த அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் லீப் சுற்று 6 ஓவரும், செமி பைனல் எட்டு ஓவரும் பைனல் 10 ஓவர் என போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது மேலும் வெற்றி பெறும் அணிகளுக்கு 2000 முதல் 5000 வரை பரிசு தொகையும் வழங்கப்படுகிறது சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் மாநில டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்த போட்டிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *