திருச்சி முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திற்கும் ஜீயபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று மாலை அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருச்சி இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எந்த ரயிலில் வந்து கீழே விழுந்து அடிபட்டு இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்த நபர் நீலக் கலர் கட்டம் போட்ட சட்டையும் கருப்பு கலர் பேண்ட் அணிந்துள்ளார் இவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த நபர் குறித்து பொதுமக்களுக்கு யாரேனும் தகவல் தெரிந்தால் இருப்பு பாதை காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *