கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.