திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் பழைய வார்டு எண் 55, புதிய வார்டு எண் 23 (தில்லைநகர் 5 ஆவது குறுக்குத் தெருவில்) உள்ள மக்கள் அதிகமாக குடியிருக்கும் காந்திபுரம் பகுதியில் நீண்ட வருடங்களாக உடைந்து பழுதடைந்துள்ள சாலையோர சாக்கடைகள் திருச்சி மாநகராட்சி சார்பாக தூர்வாரப்படாமலும், புதிதாக கட்டித்தரப்படாமலும் இதுநாள் வரை உள்ளது.

இதனால் சாக்கடையில் குப்பை கழிவுகள் தேங்கி வீட்டிற்குள் கழிவுநீர் புகுந்து வருகிறது. குடிநீரிலும் கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். பல முறை அதிகாரிகளிடமும் அப்பகுதி கவுன்சிலரிடமும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை இல்லை.

எனவே பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மாநகராட்சி சார்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் சாக்கடைகள் தூர்வாரியும் புதிய சாக்கடைகள் கட்டி தரக்கோரியும் காந்திபுரம் பகுதி மக்கள் சார்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் சரவணன் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மேலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேயர் அன்பழகன் உறுதியளித்தார். மேற்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட அம்மக்களுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும் என்பதை அக்கோரிக்கை மனுவின் வாயிலாக தெரிவித்துக் கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு லதா மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் மா.ப.சின்னூஉரை ஆகியோர் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்