திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 17,18, 20 ,வார்டு பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இ.பி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது பகுதியில் உள்ள குறைகளை அதிகாரிகளிடம் மனுவாக எழுதிக் கொடுத்தனர்.

இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட துணை மேயர் திவ்யா, அரியமங்கலம் கோட்டை தலைவர் விஜய நிர்மலா, கவுன்சிலர்கள் சண்முகப்பிரியா, பிரபாகரன், தமுமுக, மமக, திருச்சி கிழக்கு மாவட்ட துணை தலைவர் சையது முஸ்தபா, மாநகராட்சி ஜே.இ புஷ்பராணி, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுமக்களின் மனுக்களை பெற்றனர். இந்த திட்டமானது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *