அதிமுக கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் வார்டு எண் எட்டு மற்றும் பத்து ஆகிய பகுதிகளில் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு அட்டையினை திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் வழங்கினார்.

இந்நிகழ்வில் பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் ரோஜர், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, மாநில பீடி பிரிவு செயலாளர் சகாப்தின், மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் கார்த்திகேயன், நம்பிராஜன், ஐடி விங் மண்டல துணைச் செயலாளர் ராதா வேங்கடநாதன் நிர்வாகி பிளாட்டோ மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்