திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடி பகுதியில் அமைந்துள்ள NR IAS academy சார்பில் அச்சம் தவிர், போட்டி தேர்வுகளுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் பங்கேற்ற என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி இல் பயின்ற மாணவிகள் அருணா குமாரி, மீரா மாணவர்கள் பெருமாள் பிரகாஷ் அகானா உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

அருகில் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமியின் டைரக்டர் விஜயா லயன் உடன் இருந்தார். மேலும் இந்த அச்சம் தவிர் போட்டி தேர்வுகளுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *